ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி M.S. ஜனார்த்தனம் காலமானார்.
இவர் 1988 முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி ஆற்றினார்.
2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தான் தமிழ்நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், உச்ச நீதிமன்றம் ஆனது, BC, MBC மற்றும் SC/ST பிரிவினர்களுக்கான 69% இடஒதுக்கீட்டைத் தொடரச் செய்வதற்கான அளவிடக்கூடிய தரவுகளுடன் நியாயப்படுத்தலை வெளியிட என்று தமிழக அரசிற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கியது.
மாநில BC ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதியான ஜனார்த்தனம், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டம் 45ல் வழங்கப்பட்டுள்ளபடி, இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை ஆதரித்து ஓர் அறிக்கையை எழுதியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு குழுவின் தலைவராக இருந்த அவர், இந்த மாநிலத்தின் கீழ் உள்ள குரூப் A, B மற்றும் C பணிகளில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் "மிகவும் போதுமானதாக இல்லை" என்று அப்போதைய திமுக மாநில அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இதன் விளைவாக, மூன்று சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
2012 ஆம் ஆண்டில், 20 சதவீத ஒதுக்கீட்டிற்குள் வன்னியர்களுக்கு என 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அவர் அரசாங்கத்திற்கு ஒரு கருத்தினை வழங்கினார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முந்தைய அதிமுக ஆட்சியால் இது செயல்படுத்தப் பட்டாலும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை ரத்து செய்தது.