மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் என்ற திட்டத்தின் கீழான ‘ஓய்வூதியத்தைத் தானமளித்தல் முன்னெடுப்பு’ என்ற இயக்கத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், குடிமக்கள் தங்களது காப்பீட்டு நிதியை, வீட்டுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் போன்ற உடனடித் தேவை ரீதியில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.