- கடத்தலை எதிர்கொள்வதற்காக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரகத்தின் கீழ் தேசிய கடத்தல் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க (SCord - Anti-Smuggling National Coordination Centre) மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- SCord ஆனது நிகழ் நேர அடிப்படையில் கடத்தலைத் தடுப்பதற்காக தேசிய கடத்தல் தடுப்புக் கொள்கையை உருவாக்கிட இந்தியாவிற்கு உதவும்.
- மேலும்
- எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force)
- அஸ்ஸாம் படைப் பிரிவு
- இந்தோ திபெத்திய படைப் பிரிவு (ITBP - Indo-Tibetan Border Police)
- சாஸ்திர சீமா பால் (SSB - Sashastra Seema Bal) மற்றும்
- கடலோரக் காவற் படைகள்
ஆகியவை SCord-ல் உறுப்பினராக உள்ளன. நிகழ்நேர அடிப்படையில் இந்த அனைத்து நிறுவனங்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளும்.