2026 ஆம் ஆண்டிற்கான IMF-உலக வங்கி வசந்த கால கூட்டங்களில் வளரும் நாடுகள் முதன்முறையாக 'கடன் வாங்குவோர் தளத்தை' தொடங்கின.
ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும், கடன் பிரச்சனைகளில் கடன் வாங்கும் நாடுகளுக்கு ஒரு கூட்டுக்குரலை வழங்குவதையும் இத்தளம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) இதன் செயலகமாகச் செயல்பட்டு ஆதரவளிக்கும்.
நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் அறிவையும் தீர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மன்றத்தை இது வழங்குகிறது.
வளரும் நாடுகள் அதிக கடனை எதிர்கொள்கின்றன; அவற்றின் வெளிநாட்டுக் கடன் சுமார் 11.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதோடு, திருப்பிச் செலுத்தும் சுமையையும் அதிகரித்து வருகிறது.