NLC இந்தியா நிறுவனமானது, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அதன் 660 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகு கட்டம்பூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகின் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
இது NLC இந்தியா மற்றும் உத்தரப் பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் துணிகர முதலீட்டு முயற்சியான நெய்வேலி உத்தரப் பிரதேச மின்சார உற்பத்தி லிமிடெட் மூலம் உருவாக்கப்படுகிறது,
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் உத்தரப் பிரதேசம் சுமார் 75.12 சதவீதமும் மற்றும் அசாம் 24.88% அளவையும் பெறும்.