TNPSC Thervupettagam

கட்டுமானக் கழிவுகள் குறித்த அறிக்கை

September 2 , 2020 1755 days 706 0
  • சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது கட்டுமானக் கழிவுகள் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி, இந்தியா அதன் இடிபாடுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளில் 1% அளவினை மட்டுமே மறுசுழற்சி செய்கின்றது.
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 150 மில்லியன் டன்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றது.
  • எனினும், அதன் அதிகாரப்பூர்வ மறுசுழற்சித் திறனானது 1% மட்டுமேயாகும். அதாவது ஒரு நாளைக்கு 6500 டன்களாகும்.
  • 2017 ஆம் ஆண்டிற்குள்ளாக ஏறத்தாழ 53 நகரங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளிலிருந்து பொருட்களை மீட்டெடுப்பற்காக வேண்டி மறுசுழற்சி வசதிகள் ஏற்படுத்தப் பட்டன.
  • ஆனால், 2020 ஆம் ஆண்டு வரையில் 13 நகரங்கள் மட்டுமே இதனை நடைமுறையில் ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்