இந்திய நிலக்கரிப் பயன்பாட்டு ஆலைகள் இனிமேல் கனல் வாயு கந்தக நீக்க (Flue Gas Desulphurization - FGD) அமைப்புகளை நிறுவ வேண்டும் என்ற ஆணையைத் திரும்பப் பெற முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் (MoEFCC) ஆனது, 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் 537 நிலக்கரிப் பயன்பாட்டு ஆலைகள் அனைத்தும் சல்பர் டை ஆக்சைடு (SO2) மீதான உமிழ்வினைக் குறைக்க FGD அமைப்புகளை நிறுவ கட்டாயப்படுத்தியது.
நிலக்கரிப் பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடு (SO2) உமிழ்வினைக் குறைப்பதற்காக FGD அலகுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இந்த அலகுகள் ஆனது, அனைத்து TPPகளிலும் காற்றின் தரத்தின் மீதான தரங்களைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவின் 600 TPPகளில் சுமார் 8% மட்டுமே இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளன.
மேலும், FGD அலகுகளைக் கொண்ட சில ஆலைகளுக்கு அதன் அருகிலுள்ள நகரங்கள், அவற்றைக் கொண்டிராதவற்றுடன் ஒப்பிடச் செய்யும் போது SO2 அளவுகளில் மிகவும் பெரிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.