கருங்காய்ச்சலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்
May 31 , 2025 9 days 22 0
சாட், டிஜிபெளட்டி, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகியவை உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் (காலா-அசார் என்றும் அழைக்கப்படுகின்ற கருங்காய்ச்சல்) ஒழிப்பதற்காக என ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
ஒட்டுண்ணியால் ஏற்படும் கருங்காய்ச்சல், அதிக உயிரிழப்பு விகிதத்தைக் கொண்ட புறக்கணிக்கப்பட்ட வெப் பமண்டல நோய்களில் (NTD) ஒன்றாகும்.
உலகளாவியப் பாதிப்பு எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கிழக்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன என்பதோடு அங்கு பாதிக்கப் பட்ட மக்களில் பாதி பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
2025 ஆம் ஆண்டு மே மாத நிலவரப் படி, டோகோ (நான்கு NTD பாதிப்புகள்) மற்றும் பெனின், கானா மற்றும் இந்தியா (மூன்று NTD பாதிப்புகள்) உட்பட 56 நாடுகள் உலகளவில் குறைந்தது ஒரு NTD பாதிப்பினை அகற்றியுள்ளன.