TNPSC Thervupettagam

கரும்பிற்கு இதுவரை இல்லாத அளவிலான நியாய மற்றும் இலாப விலை

August 28 , 2021 1454 days 573 0
  • கரும்பு விவசாயிகளுக்காக இதுவரை இல்லாத அளவில் அதிகமான நியாய & இலாப விலையினை (Fair & Renumerative Price – FRP) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கரும்பிற்கான FRP ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.290 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • இது 10% மீள்வின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.
  • இதில் மீள்வானது 9.5% என்ற அளவிற்குக் குறைவாக இருந்தால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 என்ற விலையில் FRP ஆனது வழங்கப்படும்.
  • அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான சந்தைப்படுத்துதல் ஆண்டிற்கு FRP உயர்த்தப் பட்டுள்ளது.
  • FRP என்பது விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளால் வாங்கப்படும் கரும்பிற்கான குறைந்தபட்ச விலையாகும்.
  • இந்த விலையானது வேளாண் செலவினம் மற்றும் விலைகள் மீதான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்