பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு இருக்கும் பொழுது பணியில் நுழையும் நிலையில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரிடையே கிரீமி லேயர் (Creamy Layer) அல்லது சிறந்து விளங்கும் தனிநபர்களை அந்த வகையிலிருந்து நீக்கக் கோரிய மனுவினை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுக்கள் பிகே பவித்ரா வழக்கில் தாக்கல் செய்யப் பட்டன.
கர்நாடக அரசினால் இயற்றப்பட்ட இச்சட்டமானது கர்நாடக இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் கீழ் பட்டியலிடப்பட்ட வகுப்பு மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின வகுப்பை (SC/ST) சேர்ந்த பணியாளர்களுக்கு வயது மூப்பு விளைவின் காரணமான அடிப்படை பொருந்தும் வகையில் பதவி உயர்வு பெற வழிவகை செய்கின்றது.
வயது மூப்பு விளைவின் காரணமான அடிப்படையானது இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தொடர் பதவி உயர்வுகளுக்கு வேண்டி தங்களது மூப்புத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள வழிவகை செய்கின்றது.
இந்தச் சட்டமானது பதவி உயர்வுகளில் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்க அரசை அனுமதிக்கும் சரத்து 16(4A)ன் கீழ் மாநில அரசினால் கொண்டு வரப் பட்டுள்ளது.
“அரசின் உதவியைப் பெறுவதற்கான தகுதிசார் சோதனை” (Means feet) மற்றும் “கிரீமி லேயர்” ஆனது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று 9 நீதிபதிகளினால் தீர்ப்பு வழங்கப்பட்ட “இந்திரா சஹானி (எதிர்) இந்திய அரசு” என்ற புகழ் பெற்ற வழக்கில் கூறப்பட்டுள்ளது.
“கிரீமி லேயர்” என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையேப் பொருளாதார ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக மிகவும் மேம்பட்டு விளங்கும் உறுப்பினர்களைக் குறிக்கும்.