November 27 , 2020
1697 days
674
- வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் சமீபத்தில் இந்த நடவடிக்கையைத் தொடங்கியது.
- இதன் கீழ், மும்பையில் நாடு கடந்த போதைப் பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு, 504 கிராம் கோக்கெயின் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
- இந்த இயக்குநரகம் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய அதிகாரிகளால் நடத்தப் படுகிறது.
- இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது.
- ஏனெனில் இந்தியா உலகின் இரண்டு பெரிய அபின் உற்பத்திப் பகுதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
- அவை தங்க முக்கோணம் மற்றும் தங்க பிறை என்பவையாகும்.
- தங்க முக்கோணப் பகுதி என்பது லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளைக் குறிக்கிறது.
- தங்க பிறைப் பகுதி என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Post Views:
674