TNPSC Thervupettagam

காகர் நடவடிக்கை

May 7 , 2025 14 days 81 0
  • மத்திய அரசானது, நக்சல் அமைப்புகளை அழிப்பதற்கும், மாவோயிசத்தின் அரசியல் சித்தாந்தத்தை அகற்றவும் 2024 ஆம் ஆண்டில் காகர் என்ற ஒரு நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சத்தீஸ்கரில் சுமார் 140க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயித்து, நக்சல் அமைப்புகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
  • தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரைப் பிரிக்கும் மலைத்தொடர் 'கரேகுட்டா' மற்றும் 'பிளாக் ஹில்ஸ்' ஆகும்.
  • 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வசிக்க முடியாத இந்த மலைகள் ஆனது, மிகவும் பெரும்பாலான உள்ளூர் மக்களால் கூட அணுக முடியாததாகவே உள்ளன.
  • மாவோயிஸ்டுகள் ஒரு காலத்தில் இங்கிருந்து தான் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய "சிவப்பு வழித் தடம் (Red Corridor)" நக்சல் இயக்கம் மிகவும் தீவிரமாக செயல்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்