காட்டுத் தீயைக் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு அமைப்பு
July 10 , 2024 717 days 493 0
மகாராஷ்டிராவில் உள்ள பென்ச் புலிகள் வளங்காப்பகம் ஆனது, காட்டுத் தீயை முன் கூட்டியே கண்டறிவதற்காக ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன அமைப்பு ஆனது 15 கிலோமீட்டர் தொலைவு வரையிலான காட்சித் திறனுடன் கூடிய, உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளிப்படக் கருவியினைக் கொண்டு உள்ளது.
அதாவது புலிகள் வளங்காப்பகத்தின் 350 சதுர கி.மீ பரப்பளவு முழுவதிலும் இது கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.