TNPSC Thervupettagam

காணொலி வாயிலான சார்க் சந்திப்பு

February 21 , 2021 1625 days 683 0
  • இந்தியாவானது தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளுடன் (SAARC) காணொலி வாயிலாக சுகாதாரச் செயலாளர் மட்டத்திலான ஒரு சந்திப்பை நடத்த உள்ளது.
  • இந்தச் சந்திப்பின் போது உறுப்பு நாடுகள் தற்பொழுது நிலவி வரும் கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளனர்.
  • இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நாட்டிற்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு முன்னதாக கொரானா – 19 நோய்த் தொற்றிற்கு எதிர்வினையாக சார்க் உறுப்பு நாடுகளால் கொரானா வைரஸ் அவசர கால நிதியமானது உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியத்திற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலரை அளிக்க முன்வந்துள்ளது.
  • சார்க் ஆனது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று தொடங்கப்பட்டது.
  • இதன் தலைமையகமானது நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்