இந்திய காப்புரிமை அலுவலகத்தினால் (Indian Patent Office - IPO) செயல்படுத்தப்பட இருக்கும் காப்புரிமை நடவடிக்கை நெடுஞ்சாலைத் திட்டத்தை (Patent Prosecution Highway - PPH) ஏற்றுக் கொள்வதற்கான ஒரு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது.
இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் ஜப்பான் காப்புரிமை அலுவலகம் மற்றும் IPO ஆகியவற்றிற்கு இடையே சோதனை அடிப்படையில் மூன்று ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட இருக்கின்றது.
PPH திட்டமானது, காப்புரிமை விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான நேரத்தைக் குறைத்தல் மற்றும் நிலுவையில் உள்ள காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் உள்பட IPOவிற்குப் பல்வேறு பலன்களைத் தர இருக்கின்றது.
இது ஆய்வு செய்தலின் தரத்தை செம்மையாக மேம்படுத்துவதற்கும் காப்புரிமை விண்ணப்பங்களை சோதனை செய்வதற்கும் வழிவகுக்கும்.