இந்திய இராணுவத்தின் முதுகெலும்பான காலாட்படையின் துணிச்சல், தியாகம் மற்றும் சேவையை கௌரவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிந்தைய இராணுவ நடவடிக்கையின் முதல் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தத் தினம் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
ஜம்மு-காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பாகிஸ்தான் படை எடுப்பாளர்களை விரட்ட இந்தியக் காலாட்படைப் பிரிவுகள் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப் பட்டதை நினைவு கூரும் நாள் இதுவாகும்.