கியூபா மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உட்பட 183 நாடுகள் வாக்களித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை மட்டும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
கொலம்பியா, உக்ரைன் மற்றும் பிரேசில் ஆகியவை இந்த வாக்களிப்பினைத் தவிர்த்து விட்டன.
கியூபா மீதான பொருளாதாரத் தடையானது 1960 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்டது.
அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தேசியமயமாக்குதல் மற்றும் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தத் தடையானது விதிக்கப் பட்டது.