மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது மனநல சுகாதார மறுவாழ்வுக்காக கிரண் என்னும் ஒரு கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த எண்ணானது (1800-599-0019) அதன் கூட்டாளர்களுடன் இணைந்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது முதலுதவி, ஆரம்பகால நோய்ப் பாதிப்பு ஆய்வுக்கு ஆதரவு, துன்ப மேலாண்மை, உளவியல் ஆதரவு, மாறுபட்ட நடத்தைகளைத் தடுப்பது, மன நலம், உளவியல் நெருக்கடி மேலாண்மை போன்றவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிரண் தொலைபேசி உதவிச் சேவையானது 13 மொழிகளில் அதன் சேவையை வழங்க உள்ளது.