கிர்மித்தியா சமூகத்தின் மரபுக்கு கௌரவம்
- கிர்மித்திய சந்ததியினர் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களின் தரவுத் தளத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
- கிர்மித்தியர்கள் 1830 முதல் 1920 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய தொழிலாளர்களாக இருந்தனர்.
- அவர்கள் கரீபியன், பிஜி, மொரிஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
- டிரினிடாட் மற்றும் டொபாகோவில், பல குடும்பங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தனர்.
- இந்தப் புதிய திட்டமானது ஆறாவது தலைமுறை கிர்மித்திய சந்ததியினருக்கு கூட உதவுகிறது.
- இந்தியா அவர்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை (OCI) அட்டைகளை வழங்க உள்ளது.
- 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ், 2005 ஆம் ஆண்டில் OCI அட்டைகள் வழங்கப் படத் தொடங்கின.
- இந்த தரவுத் தளமானது இந்தியாவுடனான பழையக் குடும்ப உறவுத் தொடர்புகளைச் சரி பார்க்க உதவும்.

Post Views:
42