மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலும் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக வேண்டி அவர்களைத் தயார்படுத்தி ஆளெடுப்பதிலும் ஈடுபடும் தெஹ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act - UAPA) கீழ் தடை செய்திருக்கின்றது.
இது 1990-ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் விடுதலை என்ற நோக்கத்திற்குப் போராடுவதற்காக அமைக்கப்பட்டது என கூறிக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
இச்சட்டம் இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களைத் வேலைகளை திறம்பட தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இதன் முதன்மையான நோக்கம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கைகளை கையாளும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும்.
மேலும் இந்தச் சட்டத்தின்படி எந்தவொருப் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவளிப்பதும் இந்தியா தனக்கென்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளை வெளிநாட்டினர் உரிமை கொண்டாடும் போது அதற்கு ஆதரவளிப்பதும் குற்றமாகும்.
1967-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஆகிய இரு காலங்களில் திருத்தப்பட்டிருக்கின்றது.