TNPSC Thervupettagam
March 20 , 2019 2300 days 778 0
  • கிளிமீன் (போல்போன்மெட்டோபோன் முரிகட்டும்) என்பது பவளப் பாறை அமைப்பின் ஒரு மிக முக்கியக் கூறாகும். ஆனால் இது தற்பொழுது சர்வதேச அளவில் அதிகமாக அருகிவரும் நிலையில் உள்ளது.
  • இந்த மீன் இனங்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அச்சுறுத்து நிலையில் உள்ளன.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய” நிலையில் உள்ளது.
  • மீனவர்களால் தற்செயலாக இந்த மீன் பிடிக்கப்படுதல், ஈட்டியைக் கொண்டு மீன் பிடிப்பவர்களின் தாக்குதல் மற்றும் பவளப் பாறைகளின் இழப்பு ஆகியவை இந்த வகை இனங்களுக்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன.
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தற்பொழுதுள்ள பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகளில் இருக்கும் பவளப் பாறைகளின் பாதுகாப்பானது அருகி வரும் கிளி மீனின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத் தேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்