இது எளிதாக வாழ்வதற்கான குறியீட்டின் ஒரு பகுதியாக இந்த ஆய்வானது மேற் கொள்ளப் படுகிறது.
இது 2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் நகர வாழ்க்கைத் தரம் குறித்த குடிமக்களின் கருத்தை நேரடியாகப் பதிவு செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இது பொதுப் போக்குவரத்து, கல்வி வசதிகள், சுகாதாரச் சேவைகள், குடிநீர் இருப்பு, வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்த குடிமக்களின் கருத்தினைப் பதிவு செய்கிறது.
எளிதாக வாழ்வதற்கான குறியீடு என்பது இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை அவற்றின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன் மற்றும் நிலைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடும் ஒரு விரிவான மதிப்பீடாகும்.
இந்தக் குறியீட்டின் மூன்றாவது சுற்றானது 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற விளைவுகளின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.