TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் ஊதியக் குறைப்பு

May 20 , 2020 1917 days 802 0
  • சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் கோவிட் – 19ற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசிற்கு உதவுவதற்காக தனது ஊதியத்தில் 30% வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியங்களை உயர்த்தியுள்ளது.
  • தற்பொழுது, இந்தியக் குடியரசுத் தலைவரின் மாதாந்திர ஊதியமானது முந்தைய 1.5 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும், துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியமானது 1.10 இலட்சத்திலிருந்து 4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மாநில ஆளுநரின் ஊதியமானது 3.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்தின் போது அவரின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளைக் குறைக்கக் கூடாது என்று சரத்து 59 கூறுகின்றது.
  • ஆனால் இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொகையை நன்கொடையாக வழங்குகின்றார். அவரது ஊதியத்தின் மீது அத்தொகை பிடித்தம் செய்யப்படவில்லை.
  • இதே சரத்தானது குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை வாடகைக் கட்டணம்  எதுவுமின்றிப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்