வட கிழக்கு இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மூன்றாவது பணியிடத்தை அமைக்க வேண்டும் என மேகாலயாவின் முதல்வரான கான்ராட் சங்மா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் சிம்லாவில் உள்ள பணியிடம் மற்றும் ஐதராபாத்தின் ராஷ்ட்ரபதி நிலையம் ஆகிய இரண்டும் குடியரசுத் தலைவருக்கு தற்பொழுது உள்ள துணைப் பணியிடங்களாகும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் சிம்லாவிலும், குளிர்காலத்தில் ஐதராபாத்திலும் தலா இரண்டு வாரங்கள் தங்கி குடியரசுத் தலைவர் பணிபுரிவார்.