TNPSC Thervupettagam

குடியுரிமை உரிமைகள் போராட்டம் 2026

April 7 , 2026 15 hrs 0 min 49 0
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நேரடி வாதங்களில் கலந்து கொண்ட முதல் பதவியில் இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவர் என்ற பெயரை டொனால்ட் ட்ரம்ப் பெற்றார்.
  • பிறப்புரிமைக் குடியுரிமை தொடர்பான தனது நிர்வாக உத்தரவை ரத்து செய்த கீழ் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ட்ரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் விசாரிப்பதோடு இந்த வருகை தொடர்புடையது.
  • அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமை என்பது அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் திருத்தம் (1868), அமெரிக்காவில் பிறந்த அல்லது இயற்கைமுறை குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள் என்று கூறுகிறது.
  • இந்தக் கொள்கையின்படி, பெற்றோரின் குடியேற்றம் அல்லது குடியுரிமை நிலை எதுவாக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவருக்கும் தானாகவே குடியுரிமை கிடைக்கும்.
  • வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதில் விலக்கு உண்டு ஏனெனில் அவர்கள் இராஜதந்திர விலக்குரிமையைக் கொண்டு உள்ளனர் மற்றும் அமெரிக்க அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல.
  • தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளில் கையெழுத்திடப்பட்ட ட்ரம்பின் நிர்வாக உத்தரவு, பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என்று அந்த உத்தரவு அறிவித்தது.
  • குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால், குடியுரிமை அங்கீகாரத்தை மறுக்குமாறு இது மத்திய முகமைகளுக்கு உத்தரவிட்டது.
  • இந்த நிர்வாக உத்தரவு 14-வது திருத்தத்தை மீறுவதாகவும், குடியுரிமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் மீதான காங்கிரஸின் அரசியலமைப்பு அதிகாரத்தைச் சீர்குலைப்பதாகவும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
  • இந்த நிர்வாக உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பதால் மூன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
  • பிறப்புரிமைக் குடியுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை இந்த நிர்வாக உத்தரவு மீற முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
  • நீதிமன்றம் பிறப்புரிமைக் குடியுரிமையை உறுதிப்படுத்தினால், அதை அரசியலமைப்புத் திருத்தச் செயல்முறை மூலம் மட்டுமே மாற்ற முடியும்.
  • அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலும், நான்கில் மூன்று பங்கு மாநில சட்டமன்றங்களின் அங்கீகாரமும் தேவை.
  • இத்தகைய அரசியலமைப்புத் திருத்தச் செயல்முறை நீண்டது மற்றும் நிறைவடைய பல ஆண்டுகள் ஆகலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்