புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் சர்வதேசக் காவல் துறை கண்காட்சியின் போது இந்தியாவின் எடை குறைவான (மெல்லிய) குண்டு துளைக்காத கவச ஆடையான பாபா கவாச் அறிமுகப் படுத்தப்பட்டது.
இது தளவாடத் தொழிற்சாலைகள் வாரியம் மற்றும் பொதுத் துறை உலோகம் & உலோகக் கலவை உற்பத்தியாளரான மிதானி ஆகியவற்றால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டது.
இந்தக் கவச ஆடை மத்திய உள்துறை அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் அரை கிலோ குறைவாக, 9.2 கிலோ கிராமைக் கொண்டுள்ளது.
இந்தக் கவச ஆடையானது பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்துப் பெறப்பட்ட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இது 5 ஆண்டு கால உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது.