இந்தியத்தொல்லியல் துறையானது குதுப்மினார் ஒரு வழிபாட்டுத் தலம் அல்ல என்றும் நினைவுச் சின்னம் என்ற அதனுடையத் தற்போதைய ஒரு நிலையை மாற்ற முடியாது என்றும் வாதிட்டது.
இருப்பினும், குதூப் மினார் வளாகத்தின் கட்டுமானத்தில் இந்து மற்றும் சமணத் தெய்வங்களின் உருவங்கள் மற்றும் கட்டிடக் கலைப் பொருட்கள் மீண்டும் அதில் பயன்படுத்தப் பட்டதாக இந்தியத் தொல்லியல் துறை கூறியது.
இந்தியத் தொல்லியல் துறையின் கூற்றுப்படி, இது 1958 ஆம் ஆண்டு பண்டையக் கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் & எஞ்சியப் பகுதிகள் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருக்கும்.
இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் எந்தவொரு புதிய நடைமுறையையும் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது பாதுகாப்பு / வளங்காப்பின் ஒரு அடிப்படைக் கொள்கை ஆகும்.