குனோ தேசியப் பூங்காவிலிருந்து 60-70 கி.மீ தூரம் பயணித்த இரண்டு சிறுத்தைகள், பாரன் பகுதியின் மாங்க்ரோல் சரகம் மற்றும் பாஞ்ச் அம்லி காப்பகத்தில் கண்டறியப் பட்டுள்ளன.
KP2 மற்றும் KP3 என்று பெயரிடப்பட்ட அந்த சிறுத்தைகள், பார்வதி ஆற்றின் இருபுறமும் சுமார் 6 கி.மீ இடைவெளியில் உள்ளன.
இவை சிறுத்தை திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளுக்கு இந்தியாவில் பிறந்த முதல் தலைமுறை குட்டிகள் ஆகும்.
இத்திட்டம் குனோ-காந்தி சாகர் நிலப்பரப்பிற்குள் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வை அனுமதிக்கிறது.
ராஜஸ்தானின் 7 மாவட்டங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 17,000 சதுர கி.மீ பரப்பளவிலான குனோ-காந்தி சாகர் மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்கு வழித்தடத் திட்டத்திற்கு இது துணையாக அமைகிறது.
சிறுத்தை திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று போட்ஸ்வானாவிலிருந்து ஒன்பது சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து, இந்தியாவிற்குச் சிறுத்தைகளை அனுப்பும் மூன்றாவது ஆப்பிரிக்க நாடு போட்ஸ்வானா ஆகும்.
1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப் படுத்துவதே சிறுத்தை திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது மூன்று வளர்ந்த சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.