தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றமானது கூறியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றமானது ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடும் முன்பு தேர்தல் ஆணையத்திடம் அத்தகைய குற்றச்சாட்டுகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது, வழக்கறிஞர்கள் அஸ்வினி குமார், உபாத்யா, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் J.M. லின்ங்டோ மற்றும் பொது நல அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதானதாகும்.