TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான PMCARES நிதி

June 2 , 2021 1447 days 644 0
  • கோவிட்-19 தொற்றினால் பெற்றோர்களை இழந்த (அ) சட்டப்பூர்வ பாதுகாவலர் / வளர்ப்புப் பெற்றோர்களை இழந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும்.

முக்கிய தகவல்கள்

  • குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பு நிதி : ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் 18 வயது பூர்த்தியடையும் போது 10 லட்சம் ரூபாய் தொகுப்பு நிதி.
  • 18 முதல் 23 வயது வரை அவர்களின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையானது வழங்கப் படும்.
  • அவர்கள் 23 வயதினை அடைந்த பிறகு, தொழில் ரீதியாகவோ () தனிப்பட்ட ரீதியிலோ பயன்படுத்துவதற்காக வேண்டி முழுத் தொகையான பத்து லட்சம் ரூபாயானது வழங்கப் படும்.
  • 10 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திர வித்யாலயா () தனியார் பள்ளியில் தினசரி மாணக்கராக சேர்க்கப்பட அனுமதி வழங்கப்படும்.
  • 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதய வித்யாலயா போன்ற ஏதேனும் ஒரு மத்திய அரசு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட அனுமதி வழங்கப்படும்.
  • தற்போதுள்ள கல்விக் கடன் விதிமுறைகளுக்கு இணங்க இந்தியாவில் தொழில்முறை கல்வி/உயர் கல்விக்கான கல்விக் கடன்களைப் பெறுவதற்கு அந்தக் குழந்தைகளுக்கு உதவி வழங்கப் படும்.
  • அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீடு வசதி அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப் படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்