குழந்தைத் தொழிலாளர் குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை – 2020
June 13 , 2021 1496 days 688 0
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து குழந்தைத் தொழிலாளர் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளில் உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரசினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையினால் மேலும் பல மில்லியன் கணக்கான இளம் குழந்தைகள் தொழிலில் ஈடுபடும் நிலை உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 160 மில்லியனாக உள்ளது.
நான்கு வருடங்களில் இதன் எண்ணிக்கையானது 8.4 மில்லியன் அதிகரித்துள்ளது.
துணை சஹாரா ஆப்பிரிக்கா தான் உலகில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குழந்தைத் தொழிலில் ஈடுபட்ட 160 மில்லியன் குழந்தைகளில் 97 மில்லியன் குழந்தைகள் சிறுவர்களாவர்.