TNPSC Thervupettagam

கூடுதல் பொறுப்பு – தேசியப் பாதுகாப்புப் படை

August 1 , 2019 2113 days 867 0
  • இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் பொது இயக்குநரான S.S. தேஸ்வால் என்பவருக்கு தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படையின் (National Security Guard - NSG) இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஓய்வு பெற்ற NSGயின் பொது இயக்குநரான சுதீப் லக்டாக்கியா என்பவரிடமிருந்து இந்த பொறுப்பைப் பெற்றார்.
  • NSGயின் பொது இயக்குநர் என்ற பதவியானது இந்தியக் காவல் பணி அதிகாரியினால் நிரப்பப் படுகின்றது. SS தேஸ்வால் என்பவர் தெலுங்கானா பணிப் பிரிவிவைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாவார்.
இதுபற்றி
  • NSG ஆனது உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பதற்காக 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றது.
  • இது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதன் அனைத்து வடிவங்களிலும் கையாளுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்