கேள்வி நேரத்தை ரத்து செய்தல்
September 7 , 2020
1797 days
800
- மத்திய அரசானது மழைக்காலக் கூட்டத் தொடருக்கான கேள்வி நேரத்தை ரத்து செய்யவும் பூஜ்ய நேரத்தைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
- முந்தைய காலங்களிலும் கேள்வி நேரமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
- எனினும் இது தேசிய அவசர நிலைக் காலத்தின் போது ரத்து செய்யப்படுகிறது.
- மேலும் மத்திய சபையில் இரு அவையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்தியக் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போதும் கேள்வி நேரம் இருக்காது.
- தற்போதைய கேள்வி நேர ரத்தானது ஒரு சாதாரணமான அமர்வின் போது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கேள்வி நேரம்
- இது நாடாளுமன்ற விதிகளின் படி நடத்தப்படுகின்றது.
- நாடாளுமன்ற அமர்வின் முதல் 1 மணி நேரம் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
- ஆனால் 2014 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் கேள்வி நேரமானது 11 மணியிலிருந்து 12 மணிக்கு மாற்றப்பட்டது.
- சுதந்திரத்திற்கு முன்பு, 1893 ஆம் ஆண்டில் அரசாங்கத்திடம் முதல் கேள்வியானது கேட்கப் பட்டது.
கேள்விகளின் வகைகள்
- நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்வி : இந்த கேள்விகள் குரல்வழிப் பதிலை எதிர்நோக்குகின்றன. எனவே இதில் துணைக் கேள்விகளும் இடம் பெறும்.
- நட்சத்திரக் குறி அல்லாத கேள்விகள் : இந்தக் கேள்விகள் எழுத்து மூலமான பதிலை எதிர்நோக்குகின்றன. எனவே இதில் துணைக் கேள்விகள் இடம் பெறாது.
- சிறு குறிப்புக் கேள்விகள் : இது 10 நாட்களுக்குள் ஒரு அறிவிக்கையின் மூலம் கேட்கப் படும் கேள்வியாகும்.
- இதற்கு குரல் வழியாகப் பதிலளிக்கப் படுகின்றது.
Post Views:
800