TNPSC Thervupettagam

கேள்வி நேரம்

January 23 , 2021 1611 days 1059 0
  • இது 2020 ஆம் ஆண்டில் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது அரசினால் நிறுத்தி வைக்கப் பட்டது.
  • ஜனவரி 29 ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடருக்காகப் பாராளுமன்றம் கூடும் போது இது மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்.
  • ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் முதல் 1 மணி நேரம் கேள்வி நேரம் என்று வரையறுக்கப் படுகின்றது.
  • இது அவையின் நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இரு அவைகளின் முன்னிலைத் தலைவர்களும் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய அவைகளில் கேள்வி நேரத்தை நடத்துவதற்கு இறுதி அதிகாரத்தைப் பெற்று உள்ளவர்களாவர்.
  • இரண்டு அவைகளிலும் கேள்வி நேரமானது அந்தத் தொடரின் அனைத்து நாட்களிலும் நடைபெறும்.
  • ஆனால் பின்வரும் 2 நாட்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய வளாகத்தில் இரு அவைகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது கேள்வி நேரமானது இருக்காது.
    • நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் தினத்தன்றும் கேள்வி நேரமானது இருக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்