TNPSC Thervupettagam

கொங்கன் இரயில்வே இணைப்பு

May 29 , 2025 10 days 67 0
  • கொங்கன் இரயில்வே கழக லிமிடெட் (KRCL) நிர்வாகத்தினை இந்திய இரயில்வே நிர்வாகத்துடன் இணைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
  • கொங்கன் இரயில்வே (KR) நிர்வாகமானது, 1990 ஆம் ஆண்டில் இரயில்வே துறை அமைச்சகத்தில் ஒரு சிறப்பு நோக்கப் பிரிவாக நிறுவப்பட்டது.
  • பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக இரயில் பாதைகளை அமைக்கும் மிக கடினமான பணியை மேற்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கிய இந்த இரயில் பாதை திட்டமானது, மகாராஷ்டிராவில் உள்ள ரோஹா, கோவா, கர்நாடகாவில் உள்ள மங்களூரு மற்றும் கடலோரக் கேரளாவை இணைக்க முயன்றது.
  • இந்திய அரசு 51% பங்குகளையும், மகாராஷ்டிரா 22%, கர்நாடகா 15% மற்றும் கோவா மற்றும் கேரளா தலா 6% பங்குகளையும் கொண்டு KRCL ஆனது ஒரு கூட்டுத் துணிகர முதலீட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்