கொங்கன் இரயில்வே கழக லிமிடெட் (KRCL) நிர்வாகத்தினை இந்திய இரயில்வே நிர்வாகத்துடன் இணைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கொங்கன் இரயில்வே (KR) நிர்வாகமானது, 1990 ஆம் ஆண்டில் இரயில்வே துறை அமைச்சகத்தில் ஒரு சிறப்பு நோக்கப் பிரிவாக நிறுவப்பட்டது.
பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக இரயில் பாதைகளை அமைக்கும் மிக கடினமான பணியை மேற்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கிய இந்த இரயில் பாதை திட்டமானது, மகாராஷ்டிராவில் உள்ள ரோஹா, கோவா, கர்நாடகாவில் உள்ள மங்களூரு மற்றும் கடலோரக் கேரளாவை இணைக்க முயன்றது.
இந்திய அரசு 51% பங்குகளையும், மகாராஷ்டிரா 22%, கர்நாடகா 15% மற்றும் கோவா மற்றும் கேரளா தலா 6% பங்குகளையும் கொண்டு KRCL ஆனது ஒரு கூட்டுத் துணிகர முதலீட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.