சித்தரஞ்சன் இரயில் பெட்டித் தொழிற்சாலை, தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் மற்றும் இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வின் போது கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையானது “ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்” என்று மறுபெயரிடப்பட்டது.
அவர் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஆவார்.
சுந்தரவனக் காடுகள் பிராந்தியத்தில் 200 பழங்குடி சிறுமிகளுக்காக கௌசல் விகாஸ் கேந்திரா மற்றும் பிரிதிலதா சத்ரா ஆவாஸ் ஆகியத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
கௌசல் விகாஸ் கேந்திராவானது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகும்.
அவை பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.