TNPSC Thervupettagam

கொள்ளை நோய்கள் (திருத்தம்) மசோதா, 2020

September 25 , 2020 1787 days 736 0
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்திய நாடாளுமன்றமானது சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்ளை நோய்கள் (திருத்தம்) மசோதா, 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாநிலங்களவையினால் நிறைவேற்றப் பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இந்த மசோதாவானது கொள்ளை நோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இது போன்ற நோய்களின் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசின் அதிகாரங்களை விரிவு செய்வதற்காகவும்  கொள்ளை நோய்கள் சட்டம், 1897 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தொற்று நோய்கள் (திருத்தம்) அவசரச் சட்டத்தை நீக்குகின்றது.
  • இந்தச் சட்டமானது சுகாதார நலப் பணியாளர்களின் வாழ்விற்கு இழப்பு ஏற்படுத்துதல், தீங்கு விளைவித்தல், அபாயகரமான முறையில் நடந்து கொள்தல், புண்படுத்துதல் ஆகியவற்றை நடவடிக்கை எடுக்கத் தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாததான ஒரு  குற்றமாக ஆக்குகின்றது.
  • மேலும் இந்த மசோதாவானது 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரையிலான அபராதம் விதிக்கப் படுவதற்கான அம்சத்தையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்