TNPSC Thervupettagam

கோயம்புத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் போதுமான குறைந்தபட்ச அளவில் இல்லாத வருகை

May 26 , 2025 20 days 66 0
  • வழக்கமாக, மன்றக் கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கும்.
  • ஆனால் மொத்தமான 100 தொகுதிகளில்/வார்டுகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவிலான உறுப்பினர்களே வருகை தந்திருந்தனர்.
  • எனவே, அங்கு மாதாந்திர மன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உதவுவதற்காக வேண்டி மேயர் உடனிருந்த சிறிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • வழக்கமாக, மேயர், வழக்கமான உரைக்குப் பிறகு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பார், அதைத் தொடர்ந்து ஐந்து மண்டலத் தலைவர்களும் அது குறித்து தங்கள் குறைகளை தெரிவிப்பார்கள்.
  • பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவார் என்ற நிலையில் அதன் பின், மற்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள்.
  • அதிகாரிகள் தெரிவித்த படி, இந்தத் தீர்மானங்கள் "மிக முக்கியமானவை" என்றும், அவை மன்றத்திடமிருந்து ஒப்புதல் பெற வேண்டியிருந்ததாகவும் உள்ளது.
  • இவற்றிற்கு மட்டுமே நகரில் சாலைகள் அமைப்பதற்கான நிதி ஒப்புதல் கிடைக்கும்.
  • இருப்பினும், மேயர் அந்தத் தீர்மானங்களை அங்கு முன் வைத்த போது, ​​எதிர்க்கட்சி மன்ற உறுப்பினர் /கவுன்சிலர், அவையில் குறைந்த பட்ச உறுப்பினர் வருகை இல்லாத போது அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவது சரியானதல்ல என்று கூறி அவற்றை எதிர்த்தார்.
  • பொதுவாக, கேள்வி நேரம் சுமார் 120 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடைபெறும்.
  • இருப்பினும், அந்த மன்ற உறுப்பினர்களில் /கவுன்சிலர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் இருந்ததால், கூட்டம் 70 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்