இராஜஸ்தானின் பிகானேரில் உள்ள நோகாவில் 435 மெகாவாட் திறன் கொண்ட கோர்பியா சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமானது எட்டு மாதங்களுக்குள் முடிக்கப் பட்டது.
இது ஆண்டுதோறும் மணிக்கு 755 ஜிகாவாட் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யும், சுமார் 128,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும்.
இந்தத் திட்டமானது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 705,000 டன் கார்பன் டை ஆக்சைடு (CO₂) வெளியேற்றத்தைக் குறைக்கும்.
இராஜஸ்தானின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 35.4 ஜிகாவாட் (GW) திறனை விட அதிகமாகும் என்பதோடு இதில் 29.5 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்தும் 5.2 ஜிகாவாட் காற்றாலை மூலங்களிலிருந்தும் கிடைக்கிறது.
இந்தியா அதன் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்தைப் புதை படிவமற்ற மூலங்களிலிருந்தும், 2030 ஆம் ஆண்டு இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது.