உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தர காண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10 அன்று தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டு மார்ச் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10, பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23, பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 அன்று தேர்தல் நடைபெறும்.
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 03 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
மொத்தம் 690 சட்டசபைத் தொகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் (403 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்), உத்தர காண்ட் (70), மணிப்பூர் (60) மற்றும் கோவா (40) ஆகிய இடங்களில் தேர்தல் நடத்தப் பெறும்.