உலக நீதித் திட்டங்கள் என்ற அமைப்பின் 2021 ஆம் ஆண்டு சட்டத்தின் ஆட்சிக் குறியீட்டில் இடம் பெற்ற 139 நாடுகள் மற்றும் அதிகார வரம்பு எல்லைகளில் இந்தியா 79வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த அமைப்பானது 0 முதல் 1 வரையிலான மதிப்பின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.
1 என்ற மதிப்பானது சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கை வலுவாகக் கடைபிடிக்கப் படுவதைக் குறிக்கிறது.
இந்த ஆண்டு டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பெற்றுள்ளன.