இரயில்வேப் பாதுகாப்புப் படையானது சமீபத்தில் சதாரக் என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
“சதாரக் நடவடிக்கையின்” கீழான ஈடுபாட்டு நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன.
வரி ஏய்ப்பு மற்றும் கடத்தல் ஆகிய நோக்கத்திற்காக இரயில்வே அமைப்பின் மூலம் கடத்தப் படும் சட்டவிரோதமான மதுபானம்/போலி இந்திய ரூபாய் நோட்டுகள் / சட்ட விரோதமான புகையிலைப் பொருட்கள்/கணக்கில் காட்டப்படாத தங்கம் மற்றும் பிற பொருட்கள் மீது நடவடிக்கை எடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.