சதுப்புநிலத் தோட்டங்கள் அமைப்பதற்கான MISHTI திட்டம்
February 4 , 2023 816 days 684 0
கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்பு நில முன்னெடுப்பு எனப்படும் MISHTI திட்டமானது, கடற்கரையோரம் மற்றும் உவர்மண் நிலங்களில் சதுப்பு நிலத் தோட்டங்கள் அமைப்பதற்காக தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது கடற்கரையோரத்தில் சதுப்புநிலத் தோட்டங்களை நிறுவுவதாகும்.
MISTHI திட்டத்தின் முக்கிய நோக்கம் "சதுப்பு நில காடுகளைப் பாதுகாத்தல்" ஆகும்.
இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் பிற மூல ஆதாரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் MISHTI திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.