April 23 , 2019
2398 days
1693
- லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சர்வீசஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.
- சந்தோஷ் கோப்பை என்பது பிராந்திய மாநில மன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் பங்கு கொள்ளப்படும் கால்பந்து நாக் அவுட் போட்டியாகும்.
- இது இந்தியக் கால்பந்தின் நிர்வாக அமைப்பான அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பினால் (AIFF - All India Football Federation) நடத்தப்படுகின்றது.
- சந்தோஷ் போட்டித் தொடரானது 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இதற்கு சந்தோஷின் (தற்போது வங்க தேசத்தில் உள்ள ஒரு இடம்) மறைந்த மகாராஜா சர் மன்மத நாத் ராய் சவுத்ரி என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
- அந்தக் காலக்கட்டத்தில் இவர் இந்தியக் கால்பந்து மன்றத்தின் அதிபர் மற்றும் போட்டியின் நன்கொடையாளராக விளங்கினார்.
- இந்தப் போட்டித் தொடரில் முன்னணியில் உள்ள மூன்று போட்டியாளர்களுக்கு பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Position
|
Name of the Trophy
|
Donor
|
| Winner |
Santhosh Trophy |
Maharaja of Santhosh |
| Runner-up |
Kamla Gupta Trophy |
Former head of Indian Football association head S.K.Gupta |
| Third Place |
The Sampangi Cup |
Karnataka State Football association |
Post Views:
1693