இது பிரைம் பாயின்ட் என்ற அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.
சன்சத் ரத்னா விருதுகள் குழுவுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைவராகவும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் இருந்தனர்.
PRS இந்தியா என்ற ஒரு அமைப்பு வழங்கிய தரவுகளின் அடிப்படையில் 17வது மக்களவையின் தொடக்கத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை அவர்களின் ஒட்டு மொத்தச் செயல்திறனின் அடிப்படையில் விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இந்தப் பதிப்பின் புதிய அம்சமான வாழ்நாள் சாதனையாளர் ஏபிஜே அப்துல் கலாம் விருதானது தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான எச் வி ஹண்டேவுக்கு வழங்கப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லிக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தப் பதிப்பில் மொத்தம் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.