TNPSC Thervupettagam

சமத்துவச் சிலை

February 7 , 2022 1419 days 682 0
  • ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள  216 அடி உயர சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமிகளால் இந்த சிலையானது கருத்துருவாக்கப்பட்டது.
  • பக்தி இயக்கத் துறவி ராமானுஜாச்சாரியாரின் 1000வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் 12 ஆம் நாளான ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி சமரோஹத்தின் ஒரு பகுதியாக இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
  • ‘பஞ்சலோஹா’  என்ற ஐந்து உலோகங்களின் ஒரு கலவையைக் கொண்டு இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
  • அவை தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகியவை ஆகும்.
  • இது உலகில் உள்ள அமர்ந்த நிலையில் உள்ள மிக உயரமான உலோக சிலைகளில் ஒன்றாக திகழ்கிறது.
  • 216 அடி உயரமுள்ள இந்த ‘சமத்துவச் சிலையானது ‘பத்ர வேதி’ எனப்படும் 54 அடி உயர ஒரு அடித்தளக் கட்டிடத்தின் மீது நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்