சமயம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களால் பாதிக்கப் பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 22
August 23 , 2022 1411 days 468 0
சமயம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ அல்லது அதன் பெயரிலோ மேற் கொள்ளப் படும் தீயச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றிலிருந்துத் தப்பிப் பிழைத்தவர்களை நினைவு கூருவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த நாளில், சர்வதேச நாடுகள் மத அடிப்படையிலான வன்முறையில் உயிர் பிழைத்தவர்களையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் கௌரவிக்கின்றது.
இந்தத் தினமானது போலந்து முன்மொழிந்தபடி 2019 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அன்று 73வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.