TNPSC Thervupettagam

சமுத்திரயான் திட்டம்

September 4 , 2019 2124 days 2338 0
  • நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தில் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்தியாவின் கனவானது 2021-22ல் 'சமுத்திரயான்' திட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
  • ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள கடலில் சுமார் 6000 மீட்டர் ஆழத்தில் மூன்று நபர்களுடன் ஒரு நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தை அனுப்புவதற்கு இத்திட்டம் முன்மொழிகின்றது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் 72 மணி நேரம் கடற் படுக்கையில் ஊர்ந்து செல்லும் திறன் கொண்டது.
  • 'சமுத்திரயான்' திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். இது சென்னையில் உள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (NIOT - National Institute of Ocean Technology) மேற்கொள்ளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்