12வது சம்வாட் மாநாடு ஜாம்ஷெட்பூரில் ஹோ, முண்டா, சந்தால் மற்றும் ஓரான் பழங்குடியினரால் நிகழ்த்தப்பட்ட பாரம்பரியச் சடங்குகளுடன் தொடங்கியது.
திறப்பு விழாவில் ப்னெர், சகுவா மற்றும் நகாடா போன்ற கருவிகளைப் பயன்படுத்தி பிரார்த்தனை சடங்குகள் இடம் பெற்றன என்ற நிலையில்அதனைத் தொடர்ந்து ஹோ சமூகத்தின் அக்ரா சுத்திகரிப்பு சடங்கு நிகழ்த்தப்பட்டது.
இந்த மாநாடு பழங்குடியினரின் அறிவைப் பாதுகாத்தல், கலாச்சாரத் தொடர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்புகளை வலுப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.