சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்த 2வது தேசிய மாநாடானது
January 10 , 2020 2372 days 1048 0
மாநில வரி ஆணையர்கள் மற்றும் மத்திய வரி தலைமை ஆணையர்கள் ஆகியோரின் சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்த 2வது தேசிய மாநாடானது புதுதில்லியில் நடத்தப் பட்டது.
இந்த மாநாடானது மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் வருவாய்ச் செயலாளரான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் நடைபெற்றது.
சரக்கு மற்றும் சேவை வரி முறையைச் சீராக்குவதற்காகவும் வருவாய்க் கசிவுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்பட்டது.